பாராளுமன்ற ஊடகத்துறையை கையாளும்
ஊடக ஆலோசனைச் சபை
(கே. அசோக்குமார்)
பாராளுமன்ற அமர்வுகளை செய்தி நிறுவனங்க ளுக்காக, பத்திரிகை நிறுவனங்களிலிருந்தும், இலத்திர னியல் ஊடக நிறுவனங்களிலிருந் தும் செய்தி சேகரிப்புக்காக செல்லும் ஊடகவியலாளர் களுக்கு பாராளுமன்றத்தினால் விசேட அனுமதி அட்டை யொன்று வழங்கப்படுகிறது.
அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் என ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அந்த நிறுவனத் தின் பெயர் குறிப்பிடப்பட்டு மூன்று அல்லது இரண்டு விசேட அனுமதி அட்டைகள் வழங்கப்படுவதுண்டு.
நிறுவனங்கள் தமது நிறுவனத்திலுள்ள ஊடகவிய லாளர் ஒருவரை அல்லது இருவரை, அல்லது மூவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பும். இந்த ஊடகவியலாளர் களுக்கு தகவல் திணைக் களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை யும் அவர்கள் தம்முடன் வைத்திருக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்துக்கு மேல் பகுதியில் ஊடகவியலாளர்களுக்கான கலரி அமைந்துள் ளது. காலை 9.30 க்கு பாராளுமன்றம் ஆரம்பமாகும் போது ஊடகவியலாளர்களின் கலரி நிறைந்து காணப் படும். கேள்வி நேரம் முடிவடைந்து சபையில் பரபரப்பு குறைந்து விட்டதும் ஊடகவியலாளர்களின் பாதி பேர் ஊடகவியலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள இரண்டு தொலைக் காட்சியினூடாக சபை நடவடிக்கைகளை கவனிப்பதும், இதுவரை தாம் சேகரித்த செய்திகளை தமது நிறுவனத் துக்கு பெக்ஸ் செய்வதுமாக இருப்பார்கள்.
சில இலத்திர னியல் ஊடகவியலாளர்கள் தொலைக்காட்சியே கதி என்று கிடப்பவர்களும் உண்டு. ஆனால் பத்திரிகை யாளர்களாகிய எமக்கு சபைக்குள் அமர்ந்து சபை நடவடிக்கைகளை நேரடியாக பார்த்தும், கேட்டும் எழுதுவதில்தான் திருப்தியே இருக்கிறது. அதுதான் சரியானதும் கூட. இலத்திரனியல் ஊடகங்களிடையே யார் செய்தியை முதலில் கூறுவது என்ற போட்டியின் காரணமாக செலியூலர் தொலைபேசிகளுடன் முட்டி மோதிக்கொண்டிருப்பதையும் பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தினமும் காண்கிறோம்.
பாராளுமன்றத்திற்கு வழமையாக செல்லும் ஊடகவியலாளர் ஏதோ ஒரு காரணத்தால் வராமல் போனால் நிறுவனம் அவருக்கு பதிலாக ஒருவரை அனுப்புவது வழக்கம், அவரும் செய்திகளை சேகரித்து அனுப்புவார். அவர் புதியவரா? அல்லது அனுபவம் உள்ளவரா? என்றெல்லாம் பார்ப்பதில்லை. பாராளு மன்றமும் இதனை கண்டுகொள்வதுமில்லை. தகவல் திணைக்களம் வழங்கிய அடையாள அட்டை இருக்கி றதா? பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை இருக்கிறதா? இவை இரண்டை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் இந்திய பாராளுமன்றத்தில் இந்த நடைமுறை முற்றிலும் வேறானது.
பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் விசேட அனுமதி அட்டை நிறுவனத்துக்கு அல்லாமல் செய்தி சேகரிப்புக் காக வரும் ஊடகவியலாளரின் தனிப்பட்ட பெயருக்கே வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட செய்தி நிறுவனத்திற்காக அதன் ஊடகவியலாளர் பாராளுமன்ற ஊடகவியலாளர் கலரிக்கு செல்வதற்காக இது வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட ஊடகவியலாளர் தேசிய பாதுகாப்புக்காக முழுமையாக ‘ஸ்கிaனிங்’ செய்யப்படுகிறார். அவரது முழுமையான விபரங்கள் பெறப்படுகிறது. இவை எல் லாவற்றுக்கும் மேலாக இந்திய பாராளுமன்ற சபாநாயக ரினால் நியமிக்கப்பட்ட ‘Press Advisory Committee’ யினால் சிபாரிசு செய்யப்படவும் வேண்டும்.
ஒவ்வொரு செய்தி நிறுவனத்துக்கும் எத்தனை அனுமதி அட்டைகள் வழங்கு வது? யாருக்கு வழங்குவது என்று தீர்மானிப்பதும் இந்த குழுவினர் தான்.
குறிப்பாக ஒரு செய்தி நிறுவனத்துக்கு எத்தனை அனுமதி அட்டைகளை வழங்குவது என்று தீர்மானிப் பது பத்திரிகை நிறுவனமானால் அதன் விற்பனை, இலத்திரனியல் ஊடகமானால் மக்கள் மத்தியில் அதற்குள்ள மதிப்பு என்பன ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் ஆய்வுகளினூடாக பெறப்படுகின்றன. அதனடிப்படையில்தான் அனுமதி அட்டையும் வழங்கப்படுகிறத
பாராளுமன்ற நிருபர் அனுமதி அட்டைகளின் எண்ணிக்கை அங்கே அதிகரிக்கப்படுவதில்லை. காரணம் இந்திய பாராளு மன்றத்தில் 120 ஆசனங்களே ஊடகவியலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவர்களுக்கு மேலதிகமாக மேலும் 57 ஆசனங்கள் முதல் வரிசையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை இந்தியாவின் முன்னணி பத்திரிகை, இலத்திரனியல் ஊடகங்களும் அதிக Circulatio உள்ளதுமான பத்திரிகைகள், வானொலி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இவற்றைத் தீர்மானிக்கும் முழு பொறுப்பும் ஊடக ஆலோசனை சபைக்கு இருக்கிறது. 21 பேரைக் கொண்டதாக இந்தக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. முன்னணி ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர். இக் குழுவின் ஆயுட்காலம் ஒரு வருடம் மட்டுமே.
தற்போது செயற்பட்டு வரும் ஊடக ஆலோசனை சபையின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்க இந்திய பாராளுமன்ற செயலகத்தில் எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகரினால் Press Advisory Committee உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்.
மேற்படி குழுவில் தற்போது அங்கம் வகிக்கும் சரோஜ் நாகி என்பவரையும், கே.வி. பிரசாத் என்பவரையும், அனந் பகய்கர் என்பவரையும் பாராளுமன்ற குழு அறையில் சந்தித்தோம்.
சரோஜ் நாகி என்பவர் எச்.டி. மீடியா லிமிடட்டினால் வெளியிடப்படும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் இணை ஆசியராக கடமையாற்றுபவர். இவர் ஏற்கனவே இலங்கைக்கும் வந்து சென்றவர்
பாராளுமன்ற அமர்வுகளை செய்தி நிறுவனங்க ளுக்காக, பத்திரிகை நிறுவனங்களிலிருந்தும், இலத்திர னியல் ஊடக நிறுவனங்களிலிருந் தும் செய்தி சேகரிப்புக்காக செல்லும் ஊடகவியலாளர் களுக்கு பாராளுமன்றத்தினால் விசேட அனுமதி அட்டை யொன்று வழங்கப்படுகிறது.
ReplyDeletesuper
https://www.youtube.com/edit?o=U&video_id=rXR-uWG9xIc
அருமை
ReplyDeletehttps://www.youtube.com/edit?o=U&video_id=UOY6sd0aEkg
அருமை https://www.youtube.com/edit?o=U&video_id=44JiJPaFwEM
ReplyDeleteSUPER POST
ReplyDeletehttps://www.youtube.com/edit?o=U&video_id=CBZJihRgLJk
excellent post
ReplyDeletehttps://www.youtube.com/edit?o=U&video_id=DHjNC-t4iZs
excellent post
ReplyDeletehttps://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
ReplyDeleteDisciple of Dr Padma Subrahmanyam
Student of Dr Padma Subrahmanyam
Young Dancer Workshop
Karanas Bharatanatyam Teachers
Natya Shastra schools
Bharata Natya Shastra workshop
Workshop on Bharatanatyam
Karanas Bharatham
Natya sastra in bharatanatyam
Karanas in Natyashastra
Dancer Workshop studio
Natya Shastra of Bharata
Karanas workshop
Workshop on Natyashastra
Bharatanatyam karanas schools
Bharata Natya Shastra