Saturday, July 10, 2010

கேள்வி நேரம் நேரம் நேரடியாக் லோக் சபா டிவியில் ஒளிபரப்பாகிறது

கே. அசோக்குமார்
மாலை சுமார் 4.00 மணிக்குத்தான் இந்திய பாராளுமன்றத் தில் லோக்சபாவுக்கு (மக்களவைக்கு) செல்வதற்கான அனுமதி எமக்கு வழங்கப்பட்டிருந்தது. சபாநாயகரின் ஆசனத்துக்கு எதிரே பார்வையாளர் கலரியில் எம்மை அமரச் செய்தார்கள். மெளனமாக அமர்ந்தவாறு சபை நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருந்தோம்.
வரவு-செலவு திட்டம் மீதான குழு நிலை விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சபாநாயகரின் ஆசனத்தில் தமிழ்நாடு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற் றக் கழகத்தின் உறுப்பினர் திரு. தம்பித்துரை அமர்ந்து சபையை வழிநடத்திக் கொண்டிருந்தார். நாம் பார்வையாளர் கள் கலரியில் அமர்ந்திருக்கும் போதே, இந்தியா இலங்கை க்கு ஒதுக்கிய நிதி விவகாரம் தொடர்பாக தமிழக உறுப்பி னர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.

தம்பித்துரை எம்.ப
இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்காக இலங்கை அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிரக்கும் போது இந்தியா 500 கோடி ரூபாவை தந்துதவுவதாக குறிப்பிட்டது எமக்கு மகிழ்ச்சியினைத் தந்தது. சபையில் உறுப்பினர் ஒருவருக்கு பேசுவதற்காக நேரம் வழங்கப்பட்டவுடன் அவருக்கு வழங்கப்பட்ட நேரத்துள் அவர் பேசி முடிக்க வேண்டும்.
ஆனால் சபையில் சில உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்வது வழமையாம். சபாநாயகரோ அல்லது அவரது ஆசனத்தில் அமர்ந்தவாறு சபையை வழிநடத்தும் உறுப்பினரோ நேரம் முடிந்து விட்டது என்பதை தெரியப்படுத்தி அடுத்த உறுப்பினரை பேச அழைப்பார். லோக் சபாவிலும் எமது நாட்டில் போலவே தமக்குரிய நேரம் முடிவடைந்த பின்னரும் விடாமல் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்து நாடுகள் தானே!
ஒரு உறுப்பினர் பேச ஆரம்பித்து முடிவடையும் தறுவாயில் நேரம் முடிவடைந்து விட்டது என்பதை அறிவிக்க மணி ஒலிக்கும். இந்த மணி மூன்று முறை ஒலிக்கும். அதுவும் அவர் அமரவில்லையானால் அடுத்த உறுப்பினர் பேச ஆரம்பித்துவிடுவார். எமது நாட்டில் கள அமர்வுகள் 9.30க்கு ஆரம்பமாகின்றன. இந்தியாவில் 11 மணிக்கு ஆரம்பமாகிறது.
இலங்கையில் காலை 9.30 முதல் 10.30 மணிவரை வாய்மொழி விடைக்கான கேள்வி நேரம் நடைபெறுகிறது. அங்கு 11.00 மணி முதல் 12.00 மணி வரை கேள்வி நேரம். இதனை Rush Hour என்றுதான் சொல்ல வேண்டும். கேள்வி நேரம் நேரடியாக லோக்சபா டி.வி. அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும். (லோக்சபா) மக்களவை என்றால் என்ன அதன் செயற்பாடுகள் என்ன என்பதை முதலில் சொல்லியே ஆகவேண்டும்.
லோக்சபா (மக்களவை)
மக்களவை அல்லது லோக்சபா என்பது இந்திய பாராளுமன்றத்தின் கீழ் அவையையே குறிக்கிறது. மக்களவைக்கு உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இவர்கள் Member of parliament (MP) என நம்மூரைப் போலவே அழைக்கப்படுகின்றார்கள். இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552 ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினர்களான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கை இதுவாகும்.
ஆங்கிலோ இந்தியரை பொறுத்தவரை இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும். இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பின்னர் 15வது மக்களவை துவங்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான பிரதிநிதிகள். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசர நிலைப்பிரகடன காலத்தில் இதன் செயல்பாடுகளை குறிப்பிட்டகாலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீடித்து முடக்கலாம். 14 வது மக்களவை மே 2004ல் துவங்கி 2009 பொதுத் தேர்தல் வரை நடைபெற்றது.
தற்பொழுது 15வது மக்களவை நடைபெறுகின்றது. மக்களவைத் தொகுதிக்கான எல்லைகள் மற்றும் சீரமைவுகள் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அல்லது தேர்தல் ஆணையத்தினராலும் மேற்கொள்ளப்படும். இருப்பினும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை இந்த சீரமைவுகள் பாதிக்காது. அவர் தேர்தெடுக்கப்பட்டதின்படி அந்த மக்களவையின் ஆயுள் முழுவதும் தொடர்வார்.
உறுப்பினராவதற்கான தகுதிகள்
மக்களவை உறுப்பினராவதற்கு ஒருவர் (ஆண் அல்லது பெண்) இந்தியக் குடிமகனாகவும் வயது 25 அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். கடனாளியாக இல்லாதிருத்தல், குற்றமுறை வழக்குகள் அவர் மேல் இல்லாதிருத்தல் வேண்டும். தனித்தொகுதிகளில் (Reserved constituency) போட்டியிட ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி வகுப்பினராக இருந்தால் மட்டுமே ப

ட்டியிட முடியும்.
மக்களவை, கூட்டத் தொடர்கள் வீ வழக்கமான மக்களவை கூடும் அலுவல் நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் மீண்டும் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகின்றது. வீ ஒவ்வொரு கூட்ட அமர்வின் பொழுதும் முதல் மணி நேரம் கேள்வி நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. உறுப்பினர்கள் அமைச்சர்களின் இலாகா சம்பந்தமான கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுகின்றது. இதற்கான பதில்கள் தரும் நாட்களும் கேள்வி நேரத்தின் பொழுதே தெரிவிக்கப்படுகின்றன.
மாநிலங்களவை ராஜ்யசபா போன்றே மக்களவையும் அதற்கு ஈடான அதிகாரங்களை கொண்டுள்ளது.
பணிவிடை மசோதாக்களை மாநிலங்களவையில் (ராஜ்ய சபாவில்) நிறைவேற்ற முடியாது. ஆனால் மக்களவையில் நிறைவேற்ற முடியும்.
இரு அவைகளினாலும் எதிரொலிக்கப் பெறும் சர்ச்சைள் அல்லது முடிவுக்குவரா சர்ச்சைகள், விவாதங்கள் இரு அவைகளும் சேர்ந்தமர்ந்து நடத்தப்பெறும் கூட்டுகூட்டத்தில் முடிவெடுக்கப்படுகின்றது. அச்சமயம் மாநிலங்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட மக்களவையில் இரு மடங்கு உறுப்பினர் இருப்பதால் மக்களவை மேலோங்கிய அவையாக செயல்படும்.
மக்களவை ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப்படும். வீ நிதிநிலை அறிக்கை பட்ஜட் கூட்டத் தொடர்: பெப்ரவரி - மே வீ மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை -செப்டெம்பர் வீ குளிர்கால கூட்டத்தொடர்: நவம்பர்-டிசம்பர்
மாநிலங்கள் அவை (ராஜ்ய சபா)
மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா இந்திய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்ந்த மற்றவர்கள் மாநில சட்டமன்றி உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர்.
இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முடிவடையும். குடியரசுத் துணைத் தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார். மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும். மக்களவையைப் போல மாநிலங்களவை கலைக்கப்படுவதில்லை. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளுக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்ட அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டுக் கூட்டங்களில் மக்களவை மாநிலங்களவையை விட இரு மங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள வீட்டோ அதிகாரங்களை கொண்டிருக்கிறது.
மாநிலங்களவையின் தற்போதைய அலுவல் நிலை ex-officio கூட்டத் தலைவராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் அமீத் அன்சாரி பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிகமாக கூட்டத் தலைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர். மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13,1952 அன்று துவக்கப்பட்டது.
மாநிலங்களவை உறுப்பினர் அவதற்கான தகுதி
ஒருவர் மாநிலங்களைவை உறுப்பினர் இந்தியக் குடிமகனா கவும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராகவும், இருத்தல் வேண்டும். கடனாளியாகவும் குற்றம் புரிந்தவரா கவும் இருக்கவில்லை என்பதை தன் ஒப்புதல் வாக்குமூலத் தில் உறுதி அளிக்க வேண்டும். தனித்தொகுதிகளில் போட்டி யிட அவர் ஆதி திராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப் பைச் சார்ந்தவராக இருத்தல் அவசியம். அவரே பொதுத் தொகுதிகளிலும் போட்டியிடலாம்.
உறுப்பினர்களின் நியமனங்கள்
உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை கனேடிய செனட் மற்றும் ஜெர்மனி பந்தர்ஸ்ரேட் ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும் முறைகளின்படி இங்கும் பின்பற்றப்படுகின்றது. இதன் இருக்கைகள் மாநிலங்க ளின் பிரதிநிதித்துவத்திற்கேற்றால்போல் அதன் மக்கள் தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்படு கின்றன. பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் சிறிய மாநிலங்களுக்கு குறைவான இருக்கைகளும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் ஒரு உறுப்பினர் அவர் பதவி விலகி னாலன்றி வேறு ஒருவரை அப்பதவியில் நியமிக்க முடியாது.
மக்களவைத் தலைவரின் அதிகாரங்கள்
மக்களவைத் தலைவரே பேரவையே நடத்துபவர். கண்காணிப்பதும் மற்றும் பேரவைகளின் அலுவல்களை கவனிப்பரும் அவரே. மசோதாவின் தன்மைகளை ஆராய்ந்து (பண விடை மசோதா மற்றும் பண விடையில்லா மசோதா) அதன்படி தாக்கல் செய்ய அனுமதிக்கின்றார். பேரவையை அதன் மாண்பு குறையாமல், இறையாண்மை குறையாமல், ஒழுக்கத்துடன் நடைபெறக் கடப்பாடு கொண்டுள்ளார்.
தீர்மானங்களை அவரின் அனுமதியின்றித் தாக்கல் செய்யமுடியாது. நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம், கண்டனத் தீர்மானம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானம் போன்ற தீர்மானங்களை அனுமதிக்கின்றார். அவரின் இசைவினால் விவாதங்கள் ஏற்கப்படுகின்ற மற்றும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

3 comments: